இந்த ஊரிலுள்ள ஆண்கள் அனைவரும் இரண்டு கல்யாணம் முடிந்தே ஆக வேண்டும் !! வினோதமான கிராமம் !!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவியர் உள்ளனர்.இது அக்கிராமத்தின் வினோதமான பழமை வாய்ந்த பழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டமானது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைத்துள்ளது. இந்த பகுதியில் தேரசர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் உள்ள திருமணமான அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்கிறார்களாம். இது ஒன்று அவர்கள் பின்பற்றும் மத சடங்கு இல்லை. இந்த பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம்.
இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது மனைவியுடன் பொறாமை அல்லது பாதுகாப்பற்ற தன்மையை உணருவது இல்லை கிராமத்து பெண்கள் குடிநீரை சேகரிக்க ஒவ்வொரு நாளும் 5 கிலோமீட்டருக்கு மேல் மலையேற வேண்டும். கர்ப்பமாகிவிட்ட பிறகு ஒரு பெண் தண்ணீர் எடுக்க இவ்வளவு தூரம் நடக்க முடியாது. எனவே, அவரது கணவர் வேறொரு பெண்ணை மணக்கிறார், இதனால் வீட்டு வேலைகளை நடத்தி தண்ணீர் கொண்டு வரலாம். இது கிராமங்களில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.